இனிய தமிழ் இலக்கிய நெஞ்சங்களுக்கு வணக்கம்.
எல்லோரும் நலம் தானா?
இவ் வருடம் ஆரம்பித்து ஐந்து மாதங்கள் வெறுமனே ஓடிப் போயின. சற்றே வருத்தம் தான். புலம்பெயர் நாடுகளில் நேரத்தைத் துரத்திப் பிடிக்கும் நம் நாளாந்த பந்தயத்தில் இத்தகைய நெஞ்சுக்கு நெருக்கமான பல விடயங்கள் தவறிப்போய் விடுகின்றன.
மன்னிப்பீர்களாக!
அண்மையில் உலக புத்தக தினத்தைக் உலகமே கொண்டாடியது. யாழ் நூலக அழிப்பு நாள் நிகழ்வை சிட்னி தமிழ் அறிவகம் நினைவுகூர்ந்தது.
எழுத்தியலின் ஆற்றலைக் கொண்டாடும் நாம் என்ன செய்தோம்?
இந்தக் கேள்விக்குப் பதிலாய் இம் மாதம் ’புத்தகங்களின் சம்பாசனையை’ நினைவு கூர்வோம்.
ஒவ்வொரு புத்தகங்களும் ஒவ்வொரு சம்பாசனைகளை நிகழ்த்துகின்றன. அவைகள் நம்மோடு அந்தரங்கமாகப் பேசுகின்றன. எம் சிந்தனைகளில்; அறிவுப் புலங்களில்; நாளாந்த வாழ்க்கையில் கத்தி இன்றி இரத்தம் இன்றி புரட்சிகளைச் செய்ய வல்ல ஆற்றல்களை அவை கொண்டிருக்கின்றன. புத்தகங்களைக் கொண்டாடும் நாங்கள் அவற்றை அனுபவித்து உணர்ந்திருக்கிறோம்.
அவைகள் குறித்து பேசும் சந்திப்பாக இம்மாத இலக்கிய சந்திப்பு அமைவதாக!
நீங்கள் வாசித்து கொண்டாடிய புத்தகங்களுள் உங்களை மிகவும் பாதித்த ஒரு புத்தகம் பற்றி நம்மோடு கலந்துரையாட வாருங்கள். அதனை எழுதியவர் பற்றியும்; அதன் உள்ளடக்கம் பற்றியும்; உங்களை அது பாதித்த விதம் பற்றியும் கலந்துரையாடி அறிவதன் ஊடாக மேலும் பல அறிவுத் தளங்களுக்கு இலகுவாக நாம் பயணிக்கலாம்.
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்!
உங்கள் அனைவரையும் அன்போடு கலந்துரையாடல் சந்திப்புக்கு அழைக்கிறோம்.
தமிழால் இணைந்திருப்போம்.
காலம்: 24.6. 18 ஞாயிற்றுக் கிழமை.
இடம்: சிட்னி தமிழ் அறிவகம்.
தொடர்புகளுக்கு: யசோதா. பத்மநாதன். 0403051657