RSS

Monthly Archives: January 2019

புத்தகங்கள் அறிமுகம்

அன்புடையீர்,

நம் உயர்திணை அமைப்பின் ஆரம்பகாலத்தில் இருந்து உறுப்பினராகச் செயற்பட்டு வரும் நாட்டியக் கலாநிதி. கார்த்திகா. கணேசரின் மூன்று ஆய்வுப் பின்னணி கொண்ட நாட்டியக் கலை குறித்த புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

காலம்தோறும் நாட்டியக் கலை, தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், மற்றும் இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு ஆகிய நூல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி மாலை ஆறு மணிக்கு வைகாசிக் குன்றில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின் ஆலயமுற்றலின் மருங்கில் அமைந்திருக்கும் கலாசார மண்டபத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

இந் நிகழ்வு சிறப்புற அமைய உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பாத்திருக்கும் அதே நேரம் இந் நிகழ்வு சிறப்புற அமைய உயர்திணை தன் வாழ்த்துக்களையும் இவ் அரிய நூல்களைத் தமிழ் பேசும் நல்லுலகத்துக்கு ஆக்கி அளித்த நாட்டியக்கலாநிதிக்குத் தன் மனமார்ந்த பாராட்டுக்களையும் சொரிந்து மகிழ்கிறது.

புத்தக அறிமுகம்

 
Leave a comment

Posted by on 30/01/2019 in Uncategorized