RSS

Monthly Archives: November 2019

அவுஸ். கவிஞர்களுக்கான அழைப்பு

91v6K4iksxL._SY450_

அவுஸ்திரேலியாவில் பல காத்திரமான கவிஞர்கள் இருக்கிறார்கள். சிலர் ஆசு கவிகள்! நினைத்தவுடனே கவி படைக்க வல்லோர். மேலும் சிலர் மரபுக் கவிஞர். வரம்புக்குள் நின்று வசீகரமாகக் கவிதர வல்லோர்! மேலும் சிலர் வீச்சு வாள் போலும் வார்த்தைகளை சுழல விட்டு சொற்போர் செய்ய வல்லார்! இவைகள் எல்லாம் கைக்கொள்ள வல்லாரும் நம்முள்ளே உளர்.

எனினும் அவர்களை  ஒருங்கிணைத்து கவி இன்பம் பெற வாய்ப்புகள் நமக்குள்ளே அதிகம் இல்லை. வாழ்க்கையும் வேலையும் போட்டி போடும் உலகில் சுந்தரத்தமிழில் சிந்துக் கவி இயற்றவும் அதனை இயக்கவும் ஓர் உந்து சக்தி தேவையாகவே இருக்கிறது. ஏனைய கலைவெளிகளுக்கு வேண்டப்படுவது போலவே!

தவிரவும், அவுஸ்திரேலியச் சமூகம் நோக்கியதான கவிஞர்களின் சிந்தனைகளும் அவர்களின் கவிதா விசாலங்களும் கூட பெருமளவு ஆவணப்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.

அதன் காரணமாக, வருகிற 2020 புதுவருடத்திலிருந்து உயர்திணையின் செயல்பாடுகளின் ஒரு முன்னோட்டமாக அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர்களை ஒன்றிணைத்து மாதம் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கவிதைகளைக் கோருவதெனவும்; அவைகள் யாவும் வந்து சேர்ந்த காலக் கிரமத்தின் படி அடுத்த மாத ஆரம்பத்தில் திகதிவாரியாக இந்த உயர்திணை வலைப்பக்கத்தில் பிரசுரிப்பதெனவும் உயர்திணை நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.

அதன் ஒரு முன்னூட்டமாக மார்கழி மாதத்திற்கான தலைப்பாக, அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் முழுக்க பெரும் தாக்கத்தைச் செலுத்திய ”காட்டுத் தீ” என்ற தலைப்பு தெரிவு செய்யப் பட்டிருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் வாழும் கவிஞப் பெருமக்கள் ”காட்டுத் தீ” என்ற தலைப்பில் உங்கள் கவிதைகளை எழுதி, உங்களைப் பற்றிய புகைப்படத்தோடு கூடிய குறிப்பினையும் இணைத்து uyarthinai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கவிதைகளை எழுதி அனுப்புமாறு கோருகிறோம்.

அவுஸ்திரேலியாவில் வாழும் கவிஞர்களுக்கு மட்டுமான இந்த கூட்டுக் கவிதைகள் அவுஸ்திரேலிய பொது சமூகத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கும் அதே வேளை தெரிவு செய்யப்படும் கவிதைக்கான தலைப்புகள் அவுஸ்திரேலிய தமிழர், பண்பாடு, மொழி, மரபுரிமை, வாழ்வியல், சூழலியல் சார்ந்ததாகவும் பொது சமூகத்தோடு ஒத்திசைவானதாகவும் இருக்கும்.

அனுப்பப்படும் சகல கவிதைகளும் அடுத்த மாத முதல் வாரத்திற்குள் பிரசுரமாகும்.

எதிர்காலத்தில் சிறப்பானதாகவும், சமூகம் சார்ந்த விடயங்களைக் கொண்டதாகவும் விளங்கும் கவிதைகள்  தக்க நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்டு, அக்கவிதைகளுக்கான கவிஞர்களின் அனுமதியோடும் அவர்களது பெயர்களோடும்  உயர்திணை வெளியீடாக புத்தகமாக வெளிக்கொணரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மார்கழி மாதத்துக்கான கவிதைத் தலைப்பு: “காட்டுத் தீ”

கவிதைகள் வந்து சேரவேண்டிய மின்னஞ்சல் முகவரி: uyarthinai@gmail.com

அடுத்த மாதத்துக்கான கவிதைகள் தங்களைப்பற்றிய  தகவல்களோடு  வந்து சேர வேண்டிய

முடிவு திகதி: 30.11.19.

 

20/20 இல் 50/50 – கவிஞர். குமாரசெல்வம்

உயர்திணை அன்பர்களுக்கு அன்பார்ந்த வணக்கம்!

பல மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் புத்துணர்வோடு நாம் எழுந்து வருகிறோம்.

uyarthinai-logo

புது வருடத்தில் (2020) இருந்து பல புதிய விடயங்களை அவுஸ்திரேலிய மண்ணில் காத்திரமாய் கொடுக்கலாம் என்பதை இலக்கியக் குழுவினராக நாம் மனமார நம்புகிறோம்.

அது பற்றிய உரையாடல் நிகழ்ந்த போது, உடனடியாக நம் கவிஞ அன்பர்; நம் உயர்திணையின் ஆரம்பகாலத்தில் இருந்து தன் பங்களிப்புகளைச் காத்திரபூர்வமாக, ஆத்மார்த்தமாக அளித்து வரும் கவிஞர். குமாரசெல்வம் அவர்கள் இயற்றி அனுப்பிய கவிதையை நம் எல்லோருக்குமாக ஓர் உற்சாக பானமாக இங்கு பிரசுரிக்கிறேன். அது ஒரு விடிகாலை நேர ஒரு குவளை தேனீரின் உற்சாகத்தை தரவல்லது என்பது என் நம்பிக்கை!

தமிழின் அமுதமெனவும் இங்கு அது அளிக்கப்படுகிறது.

நேற்றயதினம் ( 14.11.2019 ) அன்று கிட்டிய கவிதை இது.

மனமென்ற ஒன்றினை

குணமென்ற இரண்டினை

இணைத்திட்ட உயர்திணை

இதற்குண்டோ ஈடு இணை!

 

துளிர்விட்ட சிந்தனைக்கு

தூயவனென் வந்தனை!

குளிர்விட்டு வசந்தம் வர

கூடி அமைர்வோம் கூற்றுப் பெற!

 

மலர் மலராய் சேர்ந்தோம்

மாலையாகக் கூடுவோம்!

வண்ணம் வண்ணமாய் கரைந்து

வானவில்லாய் மாறுவோம்!

 

உயர்திணைக்கு வேண்டும் நம்

ஒவ்வொருவர் உறுதுணை

ஒன்றிணைவோம் வரும் ஆண்டு

20/20 ( Twenty / Twenty )

உழைப்பும் தொண்டும் நமக்குள்

50/ 50 ( Fifty / Fifty )

  • கவிஞர். குமார செல்வம். 14.11.2019
 
Image

கவிஞர் அம்பிக்கான உயர்திணையின் வாழ்த்து!

20190628_204411